என்ன உலகமிது?
சொன்னதையே சொல்லிச் சொல்லிச் சொல்லும் சொல்லும் கொல்லும்
சொல்லியதையே சொல்லச் சொல்லச் சொல்பவர்ச் செயலும் கொல்லும்
பொல்லாதவர் சொல்லும் சொல்லில்
இல்லாததைச் சிரித்துச் சொல்லும்
இல்லாதவர் சொல்லும் சொல்லில்
இருப்பதை திரித்துச் சொல்லும்
கடவுள் இல்லையெனக் கத்தியாகப் பாயும் சொல்லும் ஆழம் செல்லும்
கடவுள் இருப்பதாகப் பக்தியாகப் பாடும் சொல்லும் ஆழம் செல்லும்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment