Sunday, 8 January 2023

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வரை...


 

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வரை...

விமானம் மேகத்தினுள் பறக்கும்போதே            உப்புமா மற்றும் பிரியாணி சாப்பாடு சுவையான சைவப் பிரியாணி கிடைத்தது எனக்கு                                                                          சூடான உப்புமா கிடைத்தது என் மனைவி அன்புக்கு

பாதி சாப்பிட்டதும் என் பாகப் பாதியை பரிமாற்றம் செய்ய முயன்றேன் நான்
பிரியாணி நழுவி மனைவி காலில் விழ தேநீரும் சிறு அபிஷேகம் செய்தது

நானோ என்ன செய்வதென அறியாது பதற்றத்தோடு திகைத்துப் பார்த்தேன்
செய்வதறிந்த அன்போ துரிதமாக தாளால் துடைத்து எடுப்பதைப் பார்த்தேன்

ஏன் இப்படி செய்தீங்கனு அன்பின் குரல் கேட்டது பட்டதை துடைத்துக் கொண்டே ...
நான் செய்திருந்தா திட்டிருப்பீங்கதானே    என கேட்டது அன்பானக் குரல் என் மனதை தொட்டுக் கொண்டே...

எத்தனைப் பொருமை என் அன்புக்கு அத்தனைப் பெறுமையும் என் அன்புக்கே என்னங்கவென அழைக்கும் என் அன்புக்கு 
என்ன அன்பு என அழைப்பேன் என் பங்குக்கு

அசதியுடன் தூங்கிய அன்பைப் பார்த்தபடி        தூங்காதுப் பார்த்தேன் பறந்தபடியே                  என்ன தவம் செய்தேனோ என எண்ணியபடி  எழுதினேன் கண்ணீரைத்  துடைத்தப்படியே...

- தஞ்சை த.இராமநாதன்

4 comments: