அரையபுரத்தில் காணும் பொங்கல்
காலை முதல் இரவு வரை தொடர்ந்தன பல்வேறு தமிழ்க் கலாச்சார நிகழ்ச்சிகள்
ஆரம்பம் முதல் முடியும் வரை இருந்தன
பாபநாசத்தார் முகத்தில் மகிழ்ச்சிகள்
அழகான நடனமும் நாட்டியமும் அரங்கை அலங்கரித்து மகிழ்வை நிலை நாட்டின
ஆபாசமான நடனமும் நாட்டியமும் இல்லாதது நிகழ்விற்குக் கலை கூட்டின
கட்டிய கண்ணோடு கையில் கம்போடு பானை உடைக்க தொடர்ந்த பயணம்
பாதி தூரம் கடந்து பாதை மாறியதால் உடைக்க முடியாது முடிந்த பயணம்
முப்பத்தொன்றாவது நிகழ்வை நடத்தினர் பாரதியார் நற்பணிக் குழுவினர் பயன்மிகு பரிசுகளையும் கொடுத்தனர் அரையபுரத்து ஏற்பாட்டுக் குழுவினர்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment