சீருடை சிறார்களின் சிரிப்பு
தலைக்கனம் மறந்து தரையில் அமர்ந்து மனம் மகிழ்ந்து மலர்ந்தச் சிரிப்பு
சரிசமமாய் அமர்ந்து சாதியினை மறந்து பாட சாலையில் மழலையரின் சிரிப்பு
பந்தாவை மறந்து படிப்பதை நினைந்து
பலம் வாய்ந்த நட்புறவின் சிரிப்பு
பாடம் படிப்பதை தினமும் தொடர்ந்து
படம் பிடிப்பதை அறிந்ததும் சிரிப்பு!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment