யார் பணக்காரன்? யார் குணக்காரன்?
கண்டவர் காலில் விழுந்து மானமிழந்து பணம் பார்த்தால் அவன் பணக்காரனா?
ஆள்பவர் காலில் விழுந்து இனமிழந்து
பதவிப் பெற்றால் அவன் குணக்காரனா?
பணம் திடீரென வந்ததால் மற்றவரை ஏழையெனப் பார்ப்பவன் பணக்காரனா?
பாவச் செயல் பல செய்து பதவியோடு வாழும் பச்சோந்தி குணக்காரனா?
கொள்ளையடித்தக் கேடி கோடிகளைச்
சேர்த்ததால் அவன் பணக்காரனா?
ஏழைக்குக் கொடுக்காது உண்டியலில் லட்சத்தைப் போடுபவன் குணக்காரனா?
போதுமென்ற மனதோடு உழைத்து ஈட்டி வறுமையற்று வாழ்பவனே பணக்காரன்!
அகத்தோடு புறத்தை சமநிலைப்படுத்தி
மாசற்று வாழ்பவனே குணக்காரன்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment