காற்றோடு கலந்தது கானம்
உள் மூச்சுக் குழலிலே உயிரைத்தரும் வெளிப்புறக் காற்றே
புல்லாங்குழலிலே மறு உயர்வைப்பெறும் அகப்புறக் காற்றே
உடலெனும் உள் கூட்டிற்கு உயிர்க் கொடுக்கும் வெளிப்புறக் காற்றே
புல்லாங்குழலெனும் கூட்டிற்கு உயிர்க் கொடுக்கும் அகப்புறக் காற்றே
மூக்கில் நுழைந்து பிராணனாய் உயிரைத் தரும் வெளிப்புறக் காற்றே
வாயில் வெளிவந்து பிரமாதமாய் இசைத் தரும் அகப்புறக் காற்றே
உள்ளிருந்து வெளிவரும் கல்யாணி ராக
ரகத்தின் அகப்புறக் காற்றே
விளங்கச் சொன்னால் வெற்றிடத்தை
நிரப்பி இசையாக்கும் அற்புதக் காற்றே!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment