சிறை வாழ்க்கை
போதைப் பழக்கத்தால் பேதையாக மாறினால்
வரும் வாழ்க்கை சிறை வாழ்க்கையே
களவாடும் பழக்கத்தால் களவாணியாக மாறினால்
வரும் வாழ்க்கை சிறை வாழ்க்கையே
கொலை வெறியால் கொலையாளியாக மாறினால்
வரும் வாழ்க்கை சிறை வாழ்க்கையே
கொள்ளை வெறியால் கொள்ளையனாக மாறினால்
வரும் வாழ்க்கை சிறை வாழ்க்கையே
கூடவே இருந்து குழி பறித்துக் கொன்றால்
வரும் வாழ்க்கை சிறை வாழ்க்கையே
வேலைக்காரனாக இருந்தவன் வினைக்காரனாக மாறினால்
வரும் வாழ்க்கை சிறை வாழ்க்கையே!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment