Sunday, 20 February 2022

பூனை என்றுமே யானையாகாது 

 

பூனை என்றுமே யானையாகாது 


நோட்டைக் கொடுத்து ஓட்டுக்கு வேட்டு 

ஓட்டைக் கெடுத்து நாட்டுக்கே வேட்டு 

ஓட்டைப் பெற்று ஓடுவதும் உண்டு 

பட்டையைப் போடக் கூடுவதும் உண்டு 

காட்டில் வாழ்ந்தால் யானைக்குப் பலம்

ரோட்டுக்கு வந்தால் பூனைக்கும் பலம் 

காலம் மாறினாலும் யானை யானையே 

களம் மாறினாலும் பூனை பூனையே!

- தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment