Monday, 3 January 2022

வறுமையும் கொடுமையும்

 

வறுமையும் கொடுமையும் 

வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வீட்டிலேயே வைத்துக் கொல்லுது வாட்டி வதைக்கும் வறுமையின் பசிக் கொடுமை 

வீட்டை விட்டு வெளியே வந்தாலோ வெளியிலேயே வைத்துக் கொல்லுது கொடூரக் கொரோனாவின் கொடுமை

பணம் இல்லாது பணிவோடு நாம் உதவி செய்து வாழ்ந்தபோது தெரியவில்லை அந்தக்கால வறுமையின் கொடுமை 

பணம் விரிந்து நம் கர்வத்தோடு நாம் வாழும்போது தெளிவாகத் தெரிகின்றது இந்தக்கால கொரோனாவின் கொடுமை

கொரோனாக் கொடுமையைவிட கடும் வறுமையின் கொடுமை மோசமென கொடுமையைப் பிரிப்பதுக் கொடுமை 

அக்கொடுமையோ இக்கொடுமையோ எக்கொடுமைத் தொடர்ந்தாலும் அது நம் சமுதாயத்திற்கு கொடுமையிலும் கொடுமை!

- தஞ்சை த இராமநாதன் 



1 comment: