Monday, 18 October 2021

மனித உருவத்தில் மிருகங்கள்

 

மனித உருவத்தில் மிருகங்கள்

ஆட்டைக் கொன்று மாட்டைக் கொன்று சிங்கத்தையும் கொல்பவன் யார்?

யானையோடு பூனையையும் கொன்று புலியையும் கொல்பவன் யார்?

முயலைத் தின்று குயிலைத் தின்றுநண்டையும் தின்பவன் யார்?

புறாவைத் தின்று சுறாவைத் தின்று கோழியையும் தின்பவன் யார்?

மானைத் தின்று மீனைத் தின்று ஒட்டகத்தையும் தின்பவன் யார்?

பாம்பைத் தின்று உடும்பைத் தின்று பன்றியையும் தின்பவன் யார்?

கொன்றால் பாவம் தின்றால் போச்சு எனக் கூவி பாவியானவன் யார்?

தெரிந்த உயிரைக் கொன்று தெரியாத உயிரியால் இறப்பவன் யார்?

கணவனை மனைவி கள்ளக் காதலால் கொன்றால் அவள் யார்?

மனைவியை கணவன் காரணமின்றியே கொன்றால் அவன் யார்?

சமீபத்தில் ஓடும் இரயிலில் பலபேர் பார்க்கும்போதே கற்பழித்தவன் யார்?

பகலிலே சாலையிலே விரட்டி வெட்டிக் கொலை செய்பவன் யார்?

அக்கிரம காட்டுமிராண்டிகள் நாட்டில் திரிந்தாலும் அவனெல்லாம் யார்?

குனிய வைத்து கையை ஊன வைத்து நடக்க வைத்தால் எப்படி இருக்கும் பார்!

- தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment