தாகம் தீர்க்கும் தண்ணீர்
குடி தண்ணீருக்காக வீட்டருகே கிணறு வெட்டி வாளியில் நீரை இறைப்பர் சகடையோடு கயிறைக் கட்டி
பத்து பதினைந்து அடியில் சலசலவென தண்ணீர் ஊறும் வாளியின் தண்ணீரைக் குடிக்க மளமளவென தாகம் தீரும்
இப்போது நீர் மட்டம் பாதாளம் சென்று விட்டது கிணத்தடி நீர் கானல்-நீராகி காணாமல் போய் விட்டது
ஆழ்துளை கிணறு வந்தது தண்ணீர் தர மின்சாரம் உதவுது தண்ணீர் வெளியே வர
மின்சாரம் இல்லையேல் குடிக்க தண்ணீர் ஏது? பன்னீர் இருந்தாலும் குடிக்க தண்ணீர் ஏது?
கடல் நீரை குடிநீர் ஆக்கலாம் கழிவு நீரையும் குடிநீர் ஆக்கலாம்
குளிர்பானம் தாகம் தீர்க்கலாம் மதுபானம் மோகம் தீர்க்கலாம்
ஆனாலும்,
வீட்டின் கிணற்று நீருக்கு ஈடாகுமா?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment