கதிரவன் கலக்கும் கன்னியாகுமரி
முக்கடலும் ஒன்று கூடி முக்கூடலும் ஒன்றாகும் தென் எல்லையாம் குமரி
காலைக் கதிரவன் எழுந்து மாலையில் இளைப்பாற மூழ்குமிடமாம் குமரி
பிறவிப் பெருங்கடல் நீந்தியவரை நீந்தியபின் இறைவனடி சேர்த்தக் குமரி
மூன்று நாள் தொடர் தியான நிலையால் நரேந்திரர் விவேகம் அடைந்தக் குமரி
பிறவிப் பெருங்கடல் நீந்தி அமர்ந்தவர் பெயரைப் பெற்ற பாறை குமரியில்
பிறவிப் பெருங்கடல் எழுதி எழுந்தருளி சிறப்புற்றவர் பெயரிலும் பாறை குமரியில்
குமரிக் கண்ட குமாரனை அடைய குமாரி காத்து இருந்த இடமாம் கன்னியாகுமரி
சிவனை அடைய கன்னியான பார்வதி காத்து இருந்த இடமாம் கன்னியாகுமரி!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment