மணக்கும் மல்லிகை
மொட்டாகப் பறித்து சரம் கட்டிய பின் நாரோடு வாடிப் போகாமல் மலரும்
மொட்டின் இயல்புடன் மலர்ந்து சட்டென விரிந்து நாரோடு சேர்ந்து நாரும் நாறும்
மல்லிப் பூ வாசம் மல்லிகை வாசமாகி பூவை வைக்கும் பூவையர் வசமாகும்
பூ வைத்த பூவையர் நாரைப் போல் மாறி மண மணப்பதால் மனம் மகிழ்வாகும்
பூவை வைத்தவள் பூவையர் ஆனதால் பூவை வைத்தவன் பூவையன் ஆவனோ?
பூவை வைத்து பெற்ற சுகம் கவிபாடும் பூவை வைத்து விட்ட சுகமும் கவிபாடும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment