உதையும் வதையும்
வரிக்குதிரை வரிகள் வழியாகக் கடக்க வழி இல்லையே என்றப் பயமா?
வரிக்கு மேல் வரி சாலையில் நடந்தாலே வந்து விடுமோ என்றப் பயமா?
கழுதையைக் கடத்த மனிதனின் சதியென செய்தி வந்திடுமோ என்றப் பயமா?
மனிதனைக் கடிக்க கழுதை முயற்சி என தலைப்புச் செய்தியாக வருமோ என்றப் பயமா?
கழுதை நடந்து கடந்து வந்த வதையை மனிதன் உட்கார்ந்து உணரும் நேரம் இது
மனிதன் நடந்து நொந்து வந்து உதைப்படப் போவதை கழுதை நின்று உணரும் நேரம் இது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment