சீர்மிகு சிங்கார சென்னை
சென்னைப் பட்டினம் என அன்றிருந்த சென்னை
மதராசு பட்டினம் எனவும் அன்றிருந்த சென்னை
மெட்ராஸ் என அழகாக அழைக்கப்பட்ட சென்னை
இரு மாமாங்கமாய் சென்னையான சென்னை
திருப்பதியைக் கொடுத்து தலைநகரான சென்னை
மெரீனாவின் கரையால் உலகப் புகழில் சென்னை
மயிலை கபாலீஸ்வரரால் காக்கப்படும் சென்னை
பழைய செந்நிற கட்டிடங்களுடன் சிங்கார சென்னை
மணலி சுத்திகரிப்பு ஆலைகளோடு சென்னை
குரோம்பேட்டை தோல் ஆலைகளோடு சென்னை
மாமல்லபுரத்தை புறத்தில் கொண்ட சென்னை
மீனம்பாக்கம் விமான நிலையத்தோடு சென்னை
பல இன மக்கள் சுறுசுறுப்பில் சீர்மிகு சென்னை
அலாதி அடையாள உச்சரிப்பில் சிறப்புமிகு சென்னை
ஆங்கிலேயருக்கு விற்றவரின் பெயரால் உண்டான சென்னை
Sennai என இருக்க வேண்டியது Chennai என ஆகிவிட்ட சென்னை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment