Sunday, 22 August 2021

சீர்மிகு சிங்கார சென்னை

 

சீர்மிகு சிங்கார சென்னை

சென்னைப் பட்டினம் என அன்றிருந்த சென்னை

மதராசு பட்டினம் எனவும் அன்றிருந்த சென்னை

மெட்ராஸ் என அழகாக அழைக்கப்பட்ட சென்னை

இரு மாமாங்கமாய் சென்னையான சென்னை

திருப்பதியைக் கொடுத்து தலைநகரான சென்னை

மெரீனாவின் கரையால் உலகப் புகழில் சென்னை

மயிலை கபாலீஸ்வரரால் காக்கப்படும் சென்னை

பழைய செந்நிற கட்டிடங்களுடன் சிங்கார சென்னை

மணலி சுத்திகரிப்பு ஆலைகளோடு சென்னை

குரோம்பேட்டை தோல் ஆலைகளோடு சென்னை

மாமல்லபுரத்தை புறத்தில் கொண்ட சென்னை

மீனம்பாக்கம் விமான நிலையத்தோடு சென்னை

பல இன மக்கள் சுறுசுறுப்பில் சீர்மிகு சென்னை

அலாதி அடையாள உச்சரிப்பில் சிறப்புமிகு சென்னை

ஆங்கிலேயருக்கு விற்றவரின் பெயரால் உண்டான சென்னை

Sennai என இருக்க வேண்டியது Chennai என ஆகிவிட்ட சென்னை!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment