மவுன சோகங்கள்
மனைவியை இழந்த முதியவர்; ஆனால் நடக்க முடிந்த முடி நரைத்த முதியவர்
ஒரே மகனைப் பெற்ற முதியவர்; பேரப் பிள்ளைகளோடு வாழ்ந்தப் பெரியவர்
முதியோர் இல்லம் சேர்ந்த முதியவர்; மகனால் அங்கே சேர்க்கப்பட்ட முதியவர்
சாப்பாட்டுக்கு குறையில்லை அவருக்கு; சகாக்களுக்கும் குறைவில்லை அவருக்கு
அகத்தின் தாக்கம் முகத்தில் அவருக்கு; சுகம் இருந்தும் தீராத சோகம் அவருக்கு
மகனோடு வாழ விருப்பம் அவருக்கு; மகனிடத்தில் சொல்ல மனமில்லை அவருக்கு
இதை என்னிடத்தில் சொன்னபோது கண் கலங்கினார் அவர்
நானும் கலங்கினேன் - ஆனாலும், கண் துடைத்து கண் விழித்தார் அவர்
அவர் மகனைப் பார்த்து இது நியாயமா என கேட்க நினைத்தேன் நான்
என் மகன் நல்லவன் இந்த சமுதாயம்தான் சரியில்லை என்றார் அவர்
பெரியவரைப் பார்த்து அதிர்ந்துப் போனேன் நான்
எதுவும் நடக்காததைப் போல் நடந்து சென்றார் பெரியவர்
தியாகம் பல செய்து சோகத்தில் வாழும் எம் பெரியோரே!
உம் சோகத்தை உணர்ந்து என் கண்ணீரை காணிக்கை ஆக்குகிறேன் பெரியோரே!
தெரிந்தும் தெரியாததைப் போல் நடிக்கும் சிறியோரே!
மூத்தோரை உன்னோடு சேர்ந்து வாழ அனுமதி சிறியோரே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment