எண்ணமும் வண்ணமும்
சித்திரம் பேசுவதென்பதும் விசித்திரம் அல்ல சித்திரப் பெண்ணின் சித்திரமும் விசித்திரம் அல்ல
வடிக்கும் சித்திரப் பெண் சிற்பியான சித்திரம் வடித்த சித்திரப் பூமியும் சிறப்பான சித்திரம்
உளி வைத்து அடித்தால் உலகமும் மாறும் சுத்தி வந்து அடித்தால் சுற்றமும் மாறும்
அடிக்கும்போது அடிப்பதைப் கூர்ந்து அடி படிக்கும்போது படிப்பதை ஆழ்ந்துப் படி
வீட்டுக்கு வீடு வீட்டின் எல்லையில் தொல்லை நாட்டுக்கு நாடு நாட்டின் எல்லையிலும் தொல்லை
பரந்து விரிந்தது இந்தப் புண்ணிய பூமி எல்லையால் பிரிந்து போவதால் அந்நிய பூமி
நாட்டுக்கு நாடு நடைப்பாதையில் தட மாற்றம் நிலத்தாலேயே நடுநிலையில் தடுமாற்றம்
நாட்டுக்கு நாடு மனித நிறத்தால் மாற்றம் நிறத்தை நாடும் நாட்டில் மனதில் நாற்றம்
வண்ணத்தில் தெரியுது கை வண்ணம் எண்ணத்திலிது புது வகை எண்ணம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment